13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.