கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபரின் தாயாருடைய இறுதிச் சடங்கில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆடிட்டர் சஞ்சய் குமாரின் தாயாரான சாந்தாபாய் தீக்ஷித், வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு சொந்த கிராமமான சந்தூரில் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கு திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.