டூவீலரில் லிஃப்ட் கொடுத்தது குத்தமா? | பதறவைக்கும் சம்பவம் | அதிர்ந்து போன போலீசார்
மன்னார்குடி அருகே லிஃப்ட் கொடுத்த நபரை நிர்வாணப்படுத்தி பணம் மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. காலாஞ்சிமேடு பகுதியில் சந்தோஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். அவரை அழைத்துக்கொண்டு சென்ற சிறிது தூரத்தில் மேலும் நான்கு பேர் சந்தோஷை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ,செல்போன் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.