கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற மலேசியா பக்தர்கள்
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தில் மலோசியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மனம் குளிர கும்பாபிஷேகத்தை கண்டு களித்த அவர்கள், முருகனையும் தரிசனம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த மலோசியா பக்தர்கள், திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தை பார்த்ததை மிகவும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தனர்.