பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள செல்லாங்காலனி பகுதியில் பழியர் இனத்தை சேர்ந்த 45 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீடின்றி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு இல்லாத நிலையில்அரசு வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது 45 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் அந்த இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அரசாணையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.