Marina || Chennai || மெரினா பீச்சில் கொலையுண்ட பிணம்.. போஸ் சிலைக்கு அருகே காத்திருந்த அதிர்ச்சி...
கடற்கரை பகுதியில் ஆண் சடலம் மீட்பு - விசாரணை
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா கடற்கரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு நேர் பின்புறம் உள்ள பகுதியில் , ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் குறித்து தகவல் எதுவும் அறியப்படாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.