கடலூரில் 72 வயதில் புத்தகப்பையை சுமந்துகொண்டு, கல்லூரிக்குக்கு செல்லும் செல்வமணி தாத்தா, மாணவர்களுக்கு ரோல்மாடலாக ஜொலித்து வருகிறார்
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. ஐடிஐ, எம்காம், எம்பிஏ என பட்டப்படிப்புகளை முடித்துள்ளவர், இவையெல்லாம் எனக்கு போதாது என இன்னும் படித்து வருகிறார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பின்னர், செல்வமணி வீட்டில் ஓய்வெடுத்துவிடவில்லை.
தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு, பொறுப்புகளை எல்லாம் முடித்த பின்னர், மீண்டும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கே செல்கிறார்.