சென்னை கிண்டியில் இளம் பெண் ஒருவர் மீது சரக்கு வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது. சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்த சண்முகரம்யா என்ற அந்த பெண், கிண்டி போலீஸ் நிலையம் அருகே தொழிற்பேட்டையில் நடந்து சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சண்முக ரம்யா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.