Black panther | சிசிடிவியை பார்த்ததும் அப்படியே உறைந்து நின்ற கருஞ்சிறுத்தை - அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.