ராம நவமியையொட்டி, ஆந்திரா மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ஓவியர் புருஷோத்தமன்,வாழை இலையில் அயோத்தியின் குழந்தை ராமரின் புதுமையான ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியர் புருஷோத்தமன் இதற்கு முன்பு, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் சி.எஸ்.கே வீரர்களின் படங்களையும் இலைகளில் வரைந்து அசத்தியுள்ளார்.