``துப்பாக்கி எடுத்து சுட போறீங்களா? - கொதித்து பேசிய தூய்மை பணியாளர்கள்
உயிரே போனாலும், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரைபோராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 12வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், என்.யூ.எல்.எம். திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடரவும் அவர்கள் வலியுறுத்தினர்.