திருத்தணியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல்..

Update: 2025-04-24 03:42 GMT

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் நடு பஜாரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில்,

கொடுத்த கடனை சதீஷ் திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்