விறுவிறு ஆட்டத்தின் நடுவே எதிர்பாரா திருப்பம் - முகம் கடுகடுத்த ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரியன்ஷு ஆர்யா 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.