சென்னை சைதாப்பேட்டையில் புதிய தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ படிப்பை ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிப்பதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறினார். ஆனால் அதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.