TVK Karur Stampede | TVK Vijay | TVK | Police | தவெகவுக்கு ஆறுதலாக வந்த நல்ல செய்தி

Update: 2025-10-13 03:18 GMT

தமிழக முதல்வர் மற்றும் நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய சம்பவத்தில், போலீசாருடன் வாக்குவாதம் செய்த தவெக நிர்வாகிகள் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவிட்டதாக தவெக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த தவெக நிர்வாகிகள் 20 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். நிர்மல் குமார் நீதிமன்ற காவலில் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, தவெக நிர்வாகிகள் 20 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்