தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் மிகவும் ரகசியமாகவும் அவசர அவசரமாகவும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார். ராகு கால நேரத்தில் கோவிலில் உள்ள சர்ப்ப விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து அவர் வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது.