புதுக்கோட்டையில் சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியினர் மாடுகளிடமே மனு அளித்தனர். சாலையில் திரியும் தெரு நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியினர் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்காததால், சாலையில் திரியும் மாடுகளிடமே மனுவை கொடுத்து அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.