ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக ஜோர்டான் தலைநகர் அம்மான் செல்லும் பிரதமர், அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகிறார். முன்னதாக டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பிரதமர் மோடி புறப்படும் விமானம் தாமதமானது.
இதனிடையே, ஜோர்டான் மன்னரின் அழைப்பின்பேரில் அங்கு செல்வதாகவும், இருநாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் நேரத்தில் இப்பயணம் அமைந்துள்ளதாகவும்
பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.