சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.