"வலுக்கட்டாய கடன் வசூல் 3 ஆண்டுகள் வரை சிறை".. சட்ட பேரவையில் அதிரடி அறிவிப்பு

Update: 2025-04-27 02:42 GMT

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வலுக்கட்டாய நடவடிக்கைகளால், கடன்பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள் என்றும் இச்சட்டமுன்வடிவின்படி, தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது என்றும் சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்