சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி துணை கேள்வி கேட்பதற்காக எழுந்த நிலையில் கையை தூக்கி, தூக்கி கை வலிப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார். இதற்கு, கை சுகமான பிறகு நீங்கள் பேசலாம் எனவும், இப்போது பரவாயில்லை. அமருங்கள் எனவும் சபாநாயகர் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நையாண்டி செய்யக்கூடாது எனக் கண்டிப்புடன் கூறினார்.