Kodanadu Crime | "EPS-க்காக இல்லை.."கொடநாடு வழக்கு தொடர்பாக ஜெ பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

Update: 2025-03-12 02:30 GMT

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவித்துள்ளதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் தெரிவித்துள்ளார். சம்மன் அனுப்பியதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான அவரிடம், சுமார் 3 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபெருமாள், தான் ஜெயலலிதாவிற்கு மட்டுமே பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டதாக தெரிவித்தார். மேலும், மீண்டும் விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் அழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்