ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்திய App - 50 பேர் மட்டுமே பணிபுரிவதாக தகவல்

Update: 2024-04-26 02:20 GMT

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி நிறுவனம், தனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும், எக்ஸ் தளத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக KOO செயலி பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 80 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 பேர் மட்டுமே KOO நிறுவனத்தில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்