ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பத்ராக் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வைதரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கு,கனமழை எச்சிரிக்கை இருக்கும் நிலையில், பொது மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.