Kerala | மெடிக்கலில் மருந்து வாங்குவது போல் பெண்ணிடம் கைவரிசை - வசமாக சிக்கிய முதியவர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மருந்தகத்தில் பெண் ஊழியரின் விலையுயர்ந்த ஐபோனை முதியவர் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது. பெரும்பாவூர் பகுதியில் உள்ள மருந்தகத்தில் பெண் ஊழியரிடம் மருந்து வாங்குவதுபோல் நாடகமாடி, முதியவர் ஒருவர் கைவரிசை காட்டினார். இதுதொடர்பான புகாரின்பேரில், முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.