இன்று முதல் பால் பொருட்கள் விலை உயர்வு அமல் - பாண்லே

Update: 2025-04-21 04:35 GMT

புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாண்லே மூலம் பால், தயிர், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் புதுச்சேரி முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவை, தரம் காரணமாக இந்த பொருட்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பாண்லே ஐஸ்கிரீம், குல்பி பொருட்களின் விலை (ஏப்ரல்.21) இன்று முதல் உயர்த்தப்படுவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 7 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெண்ணிலா ஐஸ்கிரீம் 8 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட குல்பி 40 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்