தமிழக மக்களின் அன்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் அழகர்மலையில் உள்ள பழமுதிர்சோலையில் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய நீண்ட நாள் கனவான அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது தற்போது நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருப்பதி பழனி பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.