தனது திரைப்படம் முதல்நாள் வெளியாகாமல் போனது இதுவே முதல்முறை எனவும், இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் நடிகர் ஆதி வருத்தத்துடன் தெரிவித்தார். அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சப்தம்' திரைப்படத்தை போரூரில் உள்ள தியேட்டரில் படக்குழுவினர், ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். பின்னர் பேசிய நடிகர் ஆதி, திரைப்படம் தாமதமாக வெளியானதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.