சிறுமிகளின் ஆபாச படங்களை வெளிநாட்டிற்கு பதிவேற்றிய இளைஞர்... சிபிஐ-யிடம் சிக்கிய முக்கிய பொருட்கள்

Update: 2022-12-04 04:58 GMT

குழந்தைகள் ஆபாச படங்களை வெளிநாட்டிற்கு பதிவேற்றிய விவகாரம் தொடர்பாக மணப்பாறை பட்டதாரியின் வங்கி கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைபட்டியை சேர்ந்த ராஜா என்பவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் தகவல் அளித்தனர்.

இதன் பேரில், டெல்லி சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஒன்றாம் தேதி, மணப்பாறையில் உள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல்நாள் 13 மணிநேர விசாரணைக்கு பின் ராஜாவிடம் இருந்து செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனையடுத்து மணப்பாறைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ராஜா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளை சோதனை செய்தனர்.

பணப்பரிவர்த்தனை, வெளிநாடுகளில் இருந்து ஏதும் பணபறி மாற்றம் நடைபெற்றுள்ளதா என்று வங்கிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகளின் சோதனை 3 நாட்களுக்கு பிறகு நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்