"மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லக் கூடாது" - ராமநாதபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

Update: 2023-02-23 16:44 GMT
  • ராமநாதபுரம் மாவட்டம், தேவி பட்டினத்தில் மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் சென்றபோது, படகில் இருந்து விழுந்து 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரும், படகோட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்நிலையில், தேவிபட்டினம், சேதுக்கரை, கீழக்கரை திருப்பாலைக்குடி, தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்பிடிப் படகுகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் மீறி அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்