"எங்களுக்காக தான் இந்த கவர்மெண்ட்டே இருக்கு.. உங்களுக்காக ஒன்னும் இல்ல" - அரசு பஸ் நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண்

Update: 2023-04-20 10:13 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நிற்காததால், பெண்கள், ஓட்டுநர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில், பெண்கள் ஏறுவதற்கு நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், ஓட்டுநர், நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேருந்தை வழிமறித்த பயணிகளின் உறவினர்கள், ஓட்டுநர், நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்