திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென பரவிய தீயால் பரபரப்பு

Update: 2023-05-19 03:21 GMT

சென்னை, ஜாபர்கான்பேட்டை, பாரி நகர் பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

முதலில் சிறிய அளவில் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த மின்சார மினி ஆட்டோ மற்றும் கட்டிடத்திலும் பரவியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததோடு மின்தடை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. கோடைகாலம் என்பதால் மின்தடை ஏற்பட்ட உடன் மிகுந்த அவதிக்குள்ளான பொதுமக்கள் வீட்டை விட்டு தெருக்களில் கூட்டமாக நின்றனர். சம்பவ இடத்திற்கு அசோக் நகர், கிண்டி, தி நகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் 20 நிமிடத்துக்குள்ளாக தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அனைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்