கடன் தவணையை கட்ட தவறிய பாஜக பெண் நிர்வாகியை..வீட்டுக்குச் சென்று மிரட்டிய குழு மேலாளர்

Update: 2022-10-15 04:00 GMT

மகளிர் சுய உதவி குழுவில் கடன் தவணையை கட்ட தவறிய பாஜக பெண் நிர்வாகியை, மகளிர் குழு மேலாளர் பத்து பேருடன் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். கடலூர், மாவட்டம், புவனகிரி பங்களா அருகில் சிறிய உணவகம் நடத்தி வரும் சாந்தலட்சுமி, ஒரு தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் குடும்ப தேவைக்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர் இந்த மாதம் கட்ட வேண்டிய 2,100 ரூபாயைக் கட்டாததால், சுய உதவிக் குழுவின் மேலாளர் 10 பேருடன் சாந்தலட்சுமியின் வீட்டிற்கு இரவு 9 மணிக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் சாந்தலட்சுமியுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. மேலும், சாந்தலட்சுமி உதவி கேட்டு பதிவு செய்துள்ள ஆடியோவும் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்