இரவில் மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பெண்ணுக்கு நடந்த விபரீதம்

Update: 2023-05-23 03:16 GMT

சென்னையில் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு பறக்கும் ரயில் நிலையத்துக்கு வந்தவர்களிடம், கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறித்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் ரயில்வே சாலை மற்றும் விக்டோரியா ஹாஸ்டல் சாலை என இரு சாலைகளிலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு பறக்கும் ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வின் என்பவரது மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். அவர்கள் சென்றதும், மற்ற இருவரிடம் பணம் மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் போன்றவற்றை பறித்துக் கொண்டு, கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடினர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்