மகளை காப்பாற்ற தந்தை எடுத்த முடிவு..கடைசியில் மந்திரவாதி செய்த காரியம்- அதிர்ச்சியில் பெற்றோர்

Update: 2023-05-19 07:26 GMT

கேரளாவில் நோயில் இருந்து குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்த போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை குணப்படுத்த முகமது ரஃபி என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். பூஜை, சடங்குகள் எனக்கூறி ஒரு லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ள முகமது ரஃபி, சிறுமியை மட்டும் தனியாக அழைத்து பூஜை செய்வதாக கூறியுள்ளார். சிறுமியின் இயல்புக்கு மாறான நடத்தையால் சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்தபோது, போலி மந்திரவாதி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முகமது ரஃபி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்