தாலி கட்டும் நேரத்தில் வரதட்சணை கேட்ட மணமகனை மரத்தில் கட்டி வைத்த மணமகள் வீட்டார்..!

Update: 2023-06-17 02:10 GMT

மண மேடையில் மாலை மாற்றிக் கொள்வதற்கு முன்பாக அமர்ஜீத் வெர்மா என்ற மணமகன் வரதட்சனை கேட்டதால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகனை கயிறு கொண்டு மரத்தில் கட்டி வைத்ததோடு சரமாரியாக திட்டித் தீர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மணமகனை மீட்டு காவலில் எடுத்து விசாரித்தனர். மணமகனின் நண்பர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதை அடுத்து இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும், தொடர்ந்து மணமகள் வீட்டாரிடம் அமர்ஜித் வரதட்சணை கேட்டதாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்