ஓடும்போதே பற்றி எரிந்த கார்... வெளியே குதித்து தப்பிய ஓட்டுநர் | திருப்பூரில் பரபரப்பு

Update: 2023-03-03 12:05 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் என்பவர், வெள்ளக்கோவில் அருகே காரில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் தீர்ந்துள்ள நிலையில், காரை எல்.பி.ஜி. கியாசுக்கு மாற்றியுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக கார் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதில் அரவிந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்