"தமிழக ஆளுநர் அரசியல்வாதியாக செயல்படக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து

Update: 2023-05-07 01:40 GMT

தமிழக ஆளுநர், அரசியல்வாதியாக செயல்படக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து முடிவுகளிலும் பாஜகவுக்கு எதிராக பேசும் திமுக., என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் தமிழகத்தின் அழிவுக்கு பாஜகவுடன் கூட்டு வைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். கடந்த 66 ஆண்டுகளில் என்.எல்.சி.யால் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இதுதொடர்பான பாதிப்புகளை அறிய, ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். தமிழக ஆளுநர், அரசியல் வாதியாக செயல்படக்கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்