மாணவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க மாலை மரியாதை...சொந்த பணத்தில் அசத்திய தலைமை ஆசிரியர்

Update: 2023-07-08 02:16 GMT

ராமநாதபுரம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளை மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர். திருப்பாலைக்குடி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை, ராஜு என்ற தலைமை ஆசிரியர், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்தி உள்ளார். இதனால் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் பள்ளிக்கு அழைத்து வந்து வரவேற்றனர். பெற்றோர் தரப்பில், நாற்காலிகள், ஒலிபெருக்கி என 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பள்ளிக்கு கல்வி சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்