EPS-ஐ வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசால் தீப்பற்றி எரிந்த கடைகள்

Update: 2023-05-24 02:39 GMT

ஸ்ரீபெரும்புதூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பட்டாசால், 2 கடைகள் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக வேலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மேடை அமைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசால், அதிமுக மேடை அருகே இருந்த 2 கடைகள், ஸ்பீக்கர் செட்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்