ரிஷப் பண்ட் உடல்நிலை? - வெளியான புதிய தகவல் | rishabh pant

Update: 2023-01-01 12:12 GMT

கார் விபத்தில் படுகாயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை கணிசமாக முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டேராடூனில் உள்ள மருத்துவமனையில் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பண்ட்டின் முகத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாகவும், காயங்களில் இருந்து பண்ட் தேறி வருவதாகவும் அவரது குடும்பத்திற்கு நெருங்கிய நபர் கூறி உள்ளார். பண்ட்டை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்