காதல் திருமணம் பண்ண போலீஸ் SI.. தம்பதிக்கே இந்த நிலையா..! உயிர் உத்தரவாதம் கேட்டு தஞ்சம்

Update: 2023-05-22 08:13 GMT

தென்காசியில் காதல் திருமணம் செய்துகொண்ட செய்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி, காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகவுள்ள இவரும், நாகர்கோவில் பட்டாலியனில் உதவி ஆய்வாளராகவுள்ள வடிவம்மாளும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சிய அவர்கள், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பின்னர் போலீசார் இருவீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் வடிவம்மாள் வீட்டார் வரவில்லை. இதனையடுத்து வடிவம்மாள் குத்தாலிங்கம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டார். காதல் திருமணம் செய்துகொண்ட உதவி ஆய்வாளர்களே காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்