வீட்டில் இறந்த தந்தை உடல்... அப்பாவின் கனவை நிறைவேற்ற 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மகன் - நெஞ்சை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2023-04-07 09:07 GMT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே, அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி 47 வயதான தினகரன். இவரது மகன் சந்துரு, திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற நிலையில் தந்தை தினகரன், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் தந்தை தினகரன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

உடல் அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில் மகன் சந்துருவை உறவினர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அழைத்து சென்றனர். தந்தை உயிரிழந்த நிலையில், மகன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்