இடுப்பளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீர்... வெள்ளத்தில் மிதக்கும் நியூசிலாந்து - நிலைமை மேலும் மோசமடையும் என எச்சரிக்கை

Update: 2023-01-28 08:57 GMT

நியூசிலாந்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்து நகரில் பெய்து வரும் கனமழையால், அங்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால், சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

வீடுகள், வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. பொதுமக்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மீட்புப் பணியில் தீயைணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்