மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி திடீர் வேண்டுகோள்

Update: 2023-07-14 02:24 GMT

உணவுப்பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப் போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்