கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த MBBS மாணவர்கள்

Update: 2023-01-12 05:10 GMT

சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் முத்தையா நகரில் மாணவர்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து அண்ணாமலை நகரில் உள்ள சிவகாமி அம்மன் நகரில் மருத்துவ மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் மற்றும் பொறியியல் மாணவர் ஒருவரை உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்