மங்களூரு ஆட்டோ வெடி விபத்துக்கும், கோவை கார் வெடி விபத்துக்கும் தொடர்பா? ஊட்டியில் சிக்கிய ஆசிரியர்!

Update: 2022-11-21 03:11 GMT

கர்நாடக மாநிலம் மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு தொடர்பாக, முகமது ஜாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, ஊட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தர் என்பவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் சிம் கார்டு வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து சுரேந்தரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சுரேந்தர், முகமது சாரிக் இடையே எப்படி தொடர்பு ஏற்பட்டது, கோவை கார் குண்டு வெடிப்பில் இறந்த முபினுக்கும் முகமது சாரிக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்