மகர விளக்கு பூஜை எதிரொலி - சபரிமலை கோவில் வெளியிட்ட தகவல்

Update: 2023-01-01 16:43 GMT

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, வெறும் 4 லட்சம் டிக்கெட்களே எஞ்சியுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்காயிரத்து 500 பேர் 18 ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்