லிப்ட் கேட்டு மாணவன் கத்தி முனையில் கடத்தல்

Update: 2022-10-05 14:43 GMT

சென்னையில் பாலிடெக்னிக் மாணவனை கத்தி முனையில் கடத்தி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை போரூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரின் 16 வயது மகன் கோவில்பட்டியில் பாலிடெக்னிக் படித்து வருகிறார். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் சிறுவன்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை மறித்த, 2 பேர் லிப்ட் கேட்டுள்ளனர். வாகனத்தில் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற போது திடீரென கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி அவரை அங்குள்ள காலி மைதானத்திற்கு கடத்திச் சென்றனர்.

பின்னர் அந்த சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் நம்பரை வைத்து அவர்களை கண்டறிந்தனர்.

சிறுவனை கடத்தியதாக பாலாஜி மற்றும் விஜய் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்