ஸ்ரீமதி மரண விவகாரம்.. போராட்டம் நடத்திய 12 பேர் கைது

ஸ்ரீமதி மரண விவகாரம்.. போராட்டம் நடத்திய 12 பேர் கைது

Update: 2022-07-24 06:10 GMT

மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வழங்க கோரி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போராட்டம் நடத்திய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு ஒன்று திரண்ட அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியை அரசுடமையாக்க வேண்டும், மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்துக்கு சென்ற கோவில்பட்டி போலீசார், போராட்டம் நடத்திய 12 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்